புகையிலை, மதுசார நிறுவனத்தின் பெயரை விளையாட்டு, கல்வி தொடர்பான நிகழ்வுகளில் பயன்படுத்த முடியாது : மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்  

Published By: Digital Desk 5

12 Nov, 2022 | 01:24 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் சட்டத்தின்படி புகையிலை நிறுவனமொன்றின் அல்லது மதுசார நிறுவனமொன்றின் பெயரை விளையாட்டு, கல்வி சம்பந்தப்பட்ட பொது நிகழ்வுகளில் அமைச்சரொருவர் நன்றி தெரிவிக்க முடியாது என்பதுடன் அந்த நிறுவனங்களிடமிருந்து அனுசரணையைக் கூட பெற்றுக்கொள்ள முடியாதென மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பணிப்பாளர் புபுது சமரசேகர தெரிவித்தார்.

எனினும், நிகழ்வொன்றின்போது துறைசார் அமைச்சர் குறித்தவொரு பியர் நிறுவனத்தின் பெயரை கூறி, அந்நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்திருந்தாக புபுது சமரசேகர சுட்டிக்காட்டினார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர்  மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் தேவைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சிகரட் மற்றும் மதுபானம்  ஆகியவற்றில் அவர்களின் அதிகம் நாட்டம் காணப்படவில்லை எனவும், நகரங்களில், தெருக்களில் வீதி வரை படங்களுக்கான தேவை , போக்குவரத்து வசதி போன்றவையே அவர்களின் அதிகபடியான தேவையா உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிகரெட் மற்றும் மதுபானம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பினால் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என அது சம்பந்தப்பட்டவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும்,

சிகரெட்டுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சிகரெட் மீதான வரி கொள்கை மாற்றப்பட வேண்டும்.  எமது நாட்டில் கிடைக்கும் வருமானத்தை வேறு நாடுகள் சுரண்டிச் செல்வதற்கு இடமளிக்க கூடாது" என்றார்.

அதிபடியான வரி  ஈட்டிக்கொள்வதால் நாட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுப்பதற்று ஏனைய நாடுகளிடம் கடன் வாங்க வேண்டிய தேவை இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21