பளு தூக்கும் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று, வவுனியா மாவட்டத்துக்கும் பளு தூக்கல் கழகத்துக்கும் மூன்று மாணவிகள் பெருமை சேர்த்துள்ளார்கள்.
இலங்கை பளு தூக்குதல் சம்மேளனத்தால் (Sri Lanka Weightlifting Federation) இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடத்தப்பட்ட தேசிய பளு தூக்குதல் சம்பியன்ஷிப் 2022 (National Weightlifting Championship 2022) போட்டியில் வவுனியா பளு தூக்கல் கழகத்தை சேர்ந்த தி.கோசியா (youth) இரண்டாம் இடத்தையும், நி.சுஸ்மிதாகினி (senior) மூன்றாம் இடத்தையும், பா.செரோண்யா (senior) பெற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்த மாணவிகள் வவுனியா பளு தூக்கல் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ஞா. ஜீவனின் நெறிப்படுத்தலிலேயே தயார்ப்படுத்தப்பட்டு பளு தூக்கும் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை தனதாக்கிக்கொண்டுள்ளனர்.
சமீப காலமாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த பெண்கள் அதிகம் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM