மொட்டுக் கட்சியை நாட்டு மக்கள் இனி ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை - ரங்கே பண்டார

Published By: Nanthini

11 Nov, 2022 | 06:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டு மக்கள் இனி ஒருபோதும் மொட்டுக்கு வாக்களிப்பர் என நாங்கள் நினைக்கவில்லை. அதனால், அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட நாங்கள் நினைக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வெள்ளிக்கிழமை (நவ 11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். 

ஜனாதிபதி மேற்கொண்டுவரும் நடவடிக்கையில் நாட்டுக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டு வருகின்றது.

ஏனெனில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்போது நாடு எதிர்கொண்டிருந்த நிலையை மக்களால் மறக்க முடியாது.

குறிப்பாக, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு கப்பல் வரும் வரை மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையங்களுக்கு முன்னாலும் நாட்கணக்கில் காத்துக்கொண்டிருந்த நாட்களை மக்கள் மறக்கவில்லை. 

அதேபோன்று குழந்தைகளின் பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவும் மக்கள் வரிசையில் நிற்கவேண்டிய நிலையே இருந்தது. 

விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு உரம் இருக்கவில்லை. ஆனால், இந்த பிரச்சினைகள் அனைத்தும் முழுமையாக தீர்க்கப்படாவிட்டாலும், மக்கள் நிம்மதியாக செயற்படக்கூடிய வகையில் நிலைமையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் சாதகமான நிலைக்கு வந்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். 

இந்நிலையில் நாட்டில் போராட்டங்களை மேற்கொண்டு, நாட்டை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதே நாட்டை நேசிப்பவர்கள் அனைவரதும் கடமையாக இருக்கின்றது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு வருகின்றது. அதனால் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்களும் எமது கட்சியின் தலைமையகத்துக்கு வந்து, எம்முடன் கலந்துரையாடி வருகின்றனர். 

அதேபோன்று ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.

அத்துடன் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவிப்பதன் மூலம் இவர்கள் அமைச்சுப் பொறுப்புகளை எதிர்பார்த்து, இவ்வாறு கூறவில்லை. 

மாறாக, நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொண்டுவரும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கவே முன்வருவதாக தெரிவித்திருக்கின்றனர். 

அதேவேளை நாடு பொருளாதார நிலையில் ஓரளவு ஸ்திரநிலையை அடையும்போது தேர்தலொன்றுக்கு செல்ல முடியும். அப்போது பலரும் எங்களுடன் இணைந்துகொள்வார்கள்.

ஆனால், நாட்டில் எந்த தேர்தல் இடம்பெற்றாலும், மக்கள் இனி ஒருபோதும் மொட்டு கட்சிக்கு வாக்களிக்கப்போவதில்லை. 

நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவந்தது மொட்டு கட்சியாகும். அதனால் மொட்டு கட்சியுடன் இணைந்து மீண்டும் கஷ்டத்தில் விழுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11
news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09
news-image

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் ஜனாதிபதி

2025-12-06 15:52:19
news-image

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும்...

2025-12-06 15:22:43
news-image

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க...

2025-12-06 15:19:56
news-image

டித்வா புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார்...

2025-12-06 13:56:32
news-image

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை...

2025-12-06 14:03:54
news-image

நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

2025-12-06 13:08:58