(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகருக்கு விரைவாக வழங்க பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இணக்கம் தெரிவித்தனர்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரசியலமைப்புப் பேரவையை ஸ்தபாபிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட இரண்டு கலந்துரையாடல்கள் நேற்றும்,நேற்று முன்தினமும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகருக்கு விரைவாக வழங்க பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இணக்கம் தெரிவித்தனர்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூன்று உறுப்பினர்களை அரசியலமைப்புப் பேரவையின் அங்கத்தவர்களாக நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரி பத்திரிகை விளம்பரமொன்றை வெளியிடுவதற்கும், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும் இரண்டு வார காலவகாசத்தை வழங்குவதற்கு இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.
அதற்கமைய பத்திரிகை விளம்பரத்தை தினசரி மற்றும் வார இறுதி பத்திரிகைகளின் பிரசுரிப்பதுடன், விண்ணப்பப் பத்திரத்தின் மாதிரி பாராளுமன்ற உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM