(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவை நினைவுபடுத்தப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (நவ 11) இடம்பெற்ற அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்.
அரசியலுக்கு பிரவேசிப்பதற்கு முன்னர் இவர் கல்விச் சேவையில் ஈடுபட்டிருந்தார்.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்ட மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். தனிப்பட்ட காரணிகளினால் அவர் 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை.
கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
கல்வித்துறைக்கு இவர் ஆற்றிய சேவையை நினைவுபடுத்த வேண்டும்.
அதேபோல் காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார விஜய குணவர்தன, டி.பி. ஏக்கநாயக்க மற்றும் பத்தேகம சமித்த தேரர் ஆகியோர் நாட்டுக்காக அரசியலில் ஈடுபட்டார்கள். இவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM