கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிபுரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 32 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக சில வீடுகளிற்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை போக்குவரத்து செய்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கிராமத்தை 6 மாதங்களாக கிராம சேவையாளர் கண்காணிக்கவில்லை எனவும், வெள்ளம் தொடர்பில் அறிவிக்க அழைப்பு ஏற்படுத்திய போதும், அழைப்பினை ஏற்கவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், பிரதேச செயலாளருக்கு மக்கள் தகவல் வழங்கியுள்ளனர். கள விஜயம் மேற்கொண்ட கண்டாவளை பிரதேச செயலாளார் த. பிருந்தாகரன் ஆராய்ந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலக தரிசனம் நிறுவனத்தின் உதவியுடன் உடனடி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்காத வகையில் வடிகான்களை அமைக்க மக்கள் வேண்டுகை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM