வவுனியா தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் திரு. இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் வெளியிடப்படும்.
தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பி. நடராசா கலந்துகொள்கிறார்.
வரவேற்புரையினை திருமதி. சி.குமாரதேவியும், வாழ்த்துரையினை சிவஸ்ரீ ஜெ.மயூரக் குருக்களும், நூல்களின் அறிமுகத்தை கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமாரும் நிகழ்த்தவுள்ளனர்.
அதனை தொடர்ந்து வேப்பங்குளம் ஞானவைரவர் ஆலய அறங்காவலர் பொ. நாகேந்திரம் நூல்களின் முதல் பிரதிகளை பெற்றுக்கொள்வார்.
நூல்களின் நயவுரைகளில் ‘சைவசமய ஆலய வழிபாட்டு அமுதம்’ பற்றி எஸ்.எஸ்.வாசன், ‘நாயன்மார்களின் வரலாறும் வழிபாடும்’ பற்றி-கி. உதயகுமார், ‘திருவாசகம்’-பற்றி திருமதி. அனுஷா மதியழகன் ஆகியோர் உரையாற்றுவர்.
நன்றியுரையை வைத்திய கலாநிதி திருமதி. விமலா விஷ்வநாதன் நிகழ்த்தியதை தொடர்ந்து மதிய போசனத்துடன் நிகழ்வு நிறைவுபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM