வியட்நாம் கடற்பரப்பில் 303 இலங்கையர்களுடன் தத்தளித்துக்கொண்டிந்த கப்பலின் தலைமை மாலுமி கப்பல் மூழ்கத்தொடங்குவதற்கு சற்று முன்னர் கப்பலில் இருந்து வெளியேறி தப்பிதலைமறைவாகியுள்ளார் என வியட்நாம் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜப்பானின் கார் கப்பலான ஹெலியோஸ் லீடர்காப்பாற்றி அவர்களை வியட்நாமின் வுங் டாவுவிற்கு கொண்டு சென்றது.
நவம்பர் ஆறாம் திகதி 303 இலங்கையர்கள் ஹெலியோஸ் லீடர் கப்பலால் காப்பாற்றப்பட்டனர் அவர்களின் கப்பல் 40 மணித்தியாலம் நகரமுடியாமல் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தது என வியட்நாமின் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பல் நகரமுடியாமல் திணறிய வேளை கப்பலின் தலைமை மாலுமி கப்பலில் இருந்து வெளியேறினார் அவர் திரும்பிவரவில்லை என வியட்நாம் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
கப்பலின் தலைமை மாலுமி எப்படி வெளியேறினார் என்பது தெரியவில்லை,வேண்டுமென்றே வெளியேறினாரா என்பது தெரியவில்லை கப்பலில் இருந்தவர்களின் இலக்காக கனடா காணப்பட்டது எனவும் வியட்நாம் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM