நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் 

Published By: Digital Desk 2

11 Nov, 2022 | 10:43 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

சர்வதேசத்தின் முன்னிலையில் எமது நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதற்கு  தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் புதிய சட்டங்களை கொண்டு வருவது அவசியம் என இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர்  தெரிவிக்கையில்,

சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தாய்மொழி மூலம் நுழைவுப் பரீட்சையை  ஆங்கில மொழியில் எழுதுவது தொடர்பில் எடுத்திருக்கும் தீர்மானத்தை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.

நாடுவது நலம்' இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நூல் வெளியீடு

அத்துடன் ,யால சம்பவங்கள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். ஜனாதிபதி அதனைக் கூற வேண்டும் என்றில்லை. சாதாரணமாகவே அதற்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

அதே வேளை, நாட்டில் படுகொலைகளை மேற்கொண்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது போன்ற விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

ஊழல் மோசடிகள் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி சபையில் தெரிவித்திருந்தார்.

 உண்மையில் எமது நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் அதனை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அதற்காக நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதாவிட்டால் புதிய சட்டங்களை கொண்டு வந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் நாட்டில் மனித உரிமைகளுக்கு மாறாக கைதுகள் இடம்பெறுகின்றன. பொலிஸ் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் சுயாதீனமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு எமது நாட்டின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலால் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணின் பெற்றோர்...

2023-11-29 17:28:42
news-image

வீதியை கடக்க முற்பட்ட பெண் கார்...

2023-11-29 17:27:39
news-image

"மலி" யானை மரணம் ; இலங்கையிடம்...

2023-11-29 17:06:54
news-image

இரகசியப் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு :...

2023-11-29 16:58:43
news-image

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

2023-11-29 17:52:14
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு- அமெரிக்க...

2023-11-29 16:56:30
news-image

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞனுக்கு...

2023-11-29 16:52:28
news-image

முன்னாள் விமானப்படை வீரர் சடலமாக மீட்பு...

2023-11-29 16:34:10
news-image

இந்திய பொருளாதார நிபுணர் மொன்டெக் சிங்...

2023-11-29 16:46:07
news-image

புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,...

2023-11-29 16:46:40
news-image

மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை...

2023-11-29 16:36:57
news-image

எப்பாவலவில் ஆற்றில் வீழ்ந்து காணாமல்போனவர் சடலமாக...

2023-11-29 16:33:03