நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் 

Published By: Digital Desk 2

11 Nov, 2022 | 10:43 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

சர்வதேசத்தின் முன்னிலையில் எமது நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதற்கு  தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் புதிய சட்டங்களை கொண்டு வருவது அவசியம் என இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர்  தெரிவிக்கையில்,

சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தாய்மொழி மூலம் நுழைவுப் பரீட்சையை  ஆங்கில மொழியில் எழுதுவது தொடர்பில் எடுத்திருக்கும் தீர்மானத்தை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.

நாடுவது நலம்' இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நூல் வெளியீடு

அத்துடன் ,யால சம்பவங்கள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். ஜனாதிபதி அதனைக் கூற வேண்டும் என்றில்லை. சாதாரணமாகவே அதற்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

அதே வேளை, நாட்டில் படுகொலைகளை மேற்கொண்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது போன்ற விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

ஊழல் மோசடிகள் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி சபையில் தெரிவித்திருந்தார்.

 உண்மையில் எமது நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் அதனை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அதற்காக நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதாவிட்டால் புதிய சட்டங்களை கொண்டு வந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் நாட்டில் மனித உரிமைகளுக்கு மாறாக கைதுகள் இடம்பெறுகின்றன. பொலிஸ் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் சுயாதீனமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு எமது நாட்டின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

மஹரகமையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-13 20:53:41