பல்கலைக்கழக பகிடிவதை : விசாரணை செய்யும் பொறுப்பு சி.ஐ.டி.யிடம்

Published By: Digital Desk 2

10 Nov, 2022 | 03:22 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பல்கலைக் கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்கள் குறித்து இனி மேல் சி.ஐ.டி.யினரே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ள நிலையில்,   இனி மேல் எந்தவொரு பொலிஸ் பிரிவிலும் பதிவாகும் பகிடிவதை தொடர்பிலும் சி.ஐ.டி.யினரேயே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதன்படி களனி பல்கலைக் கழகத்தில் 2 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனுக்கு, மாணவர் சங்கத்தின் உறுப்பினர்க்ள் மூவர் தாக்குதல் நடாத்தி பகிடிவதை செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு, அதற்கு ஆலோசனை வழங்கியதாக கூறி வேறு 6 மாணவர்களை மற்றொரு குழு பல்கலைக் கழகத்தின் இடமொன்றில் தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக களனி பொலிஸ்  நிலையத்துக்கு கிடைத்துள்ள முறைப்பாடு, பேராதனை பல்கலைக் கழக மாணவன் ஒருவனுக்கு சமூக வலைத் தளம் ஊடாக ஆபாச படங்களை  அனுப்பி பகிடிவதை செய்தமை ஆகிய சம்பவங்கள் குறித்த விசாரணைகள்  உடனடியாக சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 

3000 இராணுவம் கொலை ;கருணாவின் கருத்தால் சி .ஐ .டி விசாரணை – Kalaikathir  News Paper From Jaffna : காலைக்கதிர் -நாளிதழ் – காலை மாலை பதிப்புகள்

குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை விதிவிதாங்களுக்கு அமைய இவ்வாறு அவை பொலிஸ் மா அதிபரால் சி.ஐ.டி.யினருக்கு விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49
news-image

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

2025-01-16 17:11:52
news-image

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், உதிரி பாகங்களுடன்...

2025-01-16 16:51:06
news-image

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-01-16 16:22:14
news-image

கல்கிசையில் போதைப்பொருட்களுடன் மூதாட்டி உட்பட இருவர்...

2025-01-16 16:04:53
news-image

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய...

2025-01-16 16:02:32
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர்...

2025-01-16 15:54:24
news-image

அநுராதபுரத்தில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

2025-01-16 15:48:33
news-image

யாழில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள்...

2025-01-16 15:36:57