நீதித்துறை கட்டமைப்பில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு அவசியம் - நீதி அமைச்சர் விஜேதாச

Published By: Digital Desk 2

10 Nov, 2022 | 01:31 PM
image

(எம்.மனோசித்ரா)

பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளைப் போன்றே இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் அமெரிக்காவின் ஒத்துழைப்பினை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க நீதிமன்ற திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் ஜோனஸ் எம்.வோகர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (9) நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்கவே முடியாது | Virakesari.lk

இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் தற்போது நிலவும் வழக்கு விசாரணை தாமதமடைதல் , குறிப்பாக குற்றவியல் வழக்குகள் தாமதமடைதலை தவிர்ப்பதற்காக இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் மற்றும் குற்றவியல் கட்டளை சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் தொடர்பிலும் , இது தொடர்பில் அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள நடைமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அமெரிக்காவில் வழக்கு காலம் தாழ்த்தப்படுவதை தவிர்ப்பதற்கான நடைமுறையாக குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொள்வதன் மூலம் , நீண்ட விவாதங்கள் இன்றி வழக்கினை நிறைவு செய்யப்படுகின்றமை காணப்படுவதாக அமெரிக்க நீதிமன்ற திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் ஜோனஸ் எம்.வோகர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக பல்வேறு குற்றச் செயல்களில் பரஸ்பர ஒத்துழைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் நாடு கடத்தல் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் பயிற்சிகள் தேவைப்படுமெனில் அதனை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் ஜோனஸ் எம்.வோகர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ , 'இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட கால நட்புறவு பேணப்பட்டு வருவதாகவும் , நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்காகவும் , இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய சாதகமான மாற்றங்கள் தொடர்பிலும்  அமெரிக்காவின் ஒத்துழைப்பினை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு...

2025-03-17 15:29:36