(எம்.மனோசித்ரா)
அவசியம் ஏற்பட்டால் முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்கக் குடியுரிமையை நீக்கி, மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பார்.
அவ்வாறில்லை எனில் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் மீண்டும் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும்.
எதிர்காலத்தில் இவை இரண்டில் எதுவும் நடக்கலாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் எவ்வித தடையும் ஏற்படவில்லை. கட்சி என்ற ரீதியில் ஏனைய கட்சிகளை விட பொதுஜன பெரமுனவே தேர்தலை எதிர்கொள்ள ஆர்வமாகவுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டே கடந்த வாரங்களில் கிராம மட்டங்களில் மக்கள் சந்திப்புக்களை நடத்தினோம்.
சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட சூழலே வெளியில் காணப்படுகிறது.
அவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது, அடுத்த ஆண்டு மார்ச் மாதமல்ல, அடுத்த மாதம் தேர்தல் இடம்பெற்றால் கூட பொதுஜன பெரமுன மிக இலகுவாக வெற்றி பெறும்.
பொதுஜன பெரமுனவிற்கான புதிய தவிசாளர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார். கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரது ஆலோசனைகளும் கட்சி செயற்பாடுகளின் போது பெற்றுக் கொள்ளப்படும்.
இரட்டை குடியுரிமை விவகாரத்தைக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அவர் அதனை நீக்கி தேர்தலில் போட்டியிட்டு பாரிய வெற்றியைப் பெற்றார்.
அதே போன்று அவசியம் ஏற்பட்டால் பஷில் ராஜபக்ஷவும் தனது இரட்டை குடியுரிமையை நீக்கி மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பார். அவ்வாறில்லை எனில் இவ்விடயம் தொடர்பில் அரசியலமைப்பில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். எவ்வாறிருப்பினும் இரட்டை குடியுரிமையுடையோரின் அரசியல் உரிமைகளை பறிப்பது சரியானதொரு விடயமல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். இம்முறை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் தனிநபர் ஒருவரை இலக்காகக் கொண்டதாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM