(எம்.மனோசித்ரா)
பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குறிப்பிட்டு அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக விரைவில் விடுதலையாவார்.
அவர் விடுதலையானதன் பின்னர் மீண்டும் கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க வலியுறுத்தினார்.
பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் , தனுஷ்க குணதிலக தொடர்பில் கேட்கப்பட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது களியாட்ட விடுதிகள் உள்ளிட்டவற்றுக்குச் செல்வது சாதாரணமானதொரு விடயமாகும்.
அவுஸ்திரேலியாவில் விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்களைப் போன்று , திட்டமிட்டு இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களும் உள்ளனர். அவர்கள் இதனை ஒரு தொழிலாகவே செய்கின்றனர்.
எனவே குறித்த கிரிக்கட் வீரர் மீது மாத்திரம் முழுமையாக குற்றஞ்சாட்டி விட முடியாது. வழக்கு விசாரணைகளின் நிலைமைகளை அவதானிக்கும் போது அவர் விரைவில் விடுதலையாவார் என்பது நிச்சயமாகும்.
அவ்வாறு அவர் விடுதலையானதன் பின்னர் இலங்கை கிரிக்கட் அணியில் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM