யுக்ரைனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கேர்சன் நகரிலிருந்து வாபஸ் பெறுமாறு ரஷ்ய படைகளுக்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட மற்றொரு பின்னடைவாக இது கருதப்படுகிறது.
கேர்சனிலிருந்து படைகளை வெளியேற்ற ஆரம்பியுங்கள் என யுக்ரைனிலுள்ள ரஷ்ய படைத் தளதபதி சேர்ஜி சுரோவிகினிடம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி ஷோய்கு கூறினார்.
கேர்சன் நகரானது கேர்சன் பிராந்தியத்தின் தலைநகராகும். கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா கைப்பற்றிய முதலாவது மாநகரம் இதுவாகும். பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்ய படையெடுப்பு ஆரம்பாகிய பின்னர் இதுவரை ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரேயொரு பிராந்திய தலைநகராவும் இது இருந்தது.
இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த யுக்ரைனிய அதிகாரிகள், முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரிலிருந்து சண்டை எதுவுமின்றி ரஷ்ய படைகள் வெளியேற வாய்ப்பில்லை எனத் தெரிவித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்துத் தெரிவிக்கையில் , போர்க்களத்தில் ரஷ்யா எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஓர் ஆதாரமாக இந்த வாபஸ் அறிவிப்பு உள்ளது எனக் கூறியுள்ளார். (S)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM