கவிஞர் முறையூர் மங்கேஸ்வரன் எழுதிய புதுக்கவிதை நூலான ‘மனதோடு பேசும் மௌனங்கள்’ மற்றும் ஹைக்கூ கவிதை நூலான ‘மகிழம் பூக்கள்’ ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா மட்டக்களப்பு - செங்கலடி பிரதேசத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சந்திவெளி - தமிழ்ச்சங்கம் பாரம்பரிய கிராமிய கலை மன்றத்தின் ஏற்பாட்டில் முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஸ்ண மிஷன் வித்தியாலய அதிபர் எம். தவநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி, கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில்முத்தமிழ் கலைஞன் பா. கதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரின் விரிவுரையாளர் மோகனதாசன் கவிதை நூல்களுக்கான நயவுரையையும் ஆசிரிய வள நிலையத்தின் விரிவுரையாளர் திருமதி சுதாகினி டெஸ்மன் ராகல் ஆய்வுரையையும் நிகழ்த்தினர்.
இவ்விழாவில் பங்கேற்ற அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் கையளிக்கப்பட்டன. கவிதை நூல்களுக்காக எவரிடமும் அன்பளிப்பு நிதி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராஜ்யத்தில் குடியுரிமை பெற்றுள்ள நூலாசிரியர் கவிஞர் முறையூர் மங்கேஸ்வரன் பாடசாலை பருவத்திலிருந்தே கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM