மாத்தளை , எல்கடுவ தமிழ் மகா வித்தியாலயத்தின் இந்து மன்றத்தினர் , பிரதி அதிபர் ஜீ.சரவணராஜ், ஆசிரியர்கள் , அபிவிருத்திக்குழு உத்தியோகத்தர்கள், ஆசிரிய பயிலுனர்கள் மற்றும் மாணவர்களினதும் முயற்சியில் கடந்த 6ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை வாணி விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
அதிபர் மா.தியாகராஜன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக கலைஞர், எழுத்தாளர் , கலைமாமணி லயன் பொன். பத்மநாதன் (ஜே.பீ), கெளரவ அதிதிகளாக பொன். பிரகாஷ், உதவிக் கல்விப் பணிப்பாளர் (சைவநெறி) வலயக் கல்வி பணிமனை மாத்தளை, திருமதி. எஸ். மகேஸ்வரி, இந்து சமய ஆசிரிய ஆலோசகர் , வலயக் கல்விப் பணிமனை, மாத்தளை மற்றும் சிறப்பு அதிதிகளாக எஸ். சந்திரசேகரம், கௌரவ தலைவர் மகாத்மா காந்தி சபா மாத்தளை, வே. பாலசுப்ரமணியம் அவர்கள், கௌரவ தலைவர் இந்து மகா சபை, ஸ்ரீ சிந்தாகட்டி குமர பெருமான் ஆலயம் மாத்தளை, எல். கவியரசன், கௌரவ தலைவர் சைவ மகா சபை மாத்தளை, எஸ். கேசவன் கௌரவ தலைவர், சுபீட்சம் - இந்து சமய சமூக நலன்புரி ஒன்றியம், எம். யோகராஜா செட்டியார், கௌரவ தலைவர் சுவாமி விபுலானந்த கலா மன்றம், கே. கிருஷ்ணகுமார், மலையக கல்வி அபிவிருத்தி மன்ற பரீட்சைகள் பொறுப்பாளர், எம்.ராம்திலகர், ரோட்டரி கழகம் மாத்தளை, ஆர். ஸ்ரீதரன் இலங்கை மாலைத்தீவுக்கான உதவி ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டதோடு, மாத்தளை வலய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
விழாவில் மாணவ, மாணவிகளின் வரவேற்பு, பரதநாட்டியம், நாடகம், கவியரங்கம், பண்ணிசை, வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கதம்ப நடனம் என முத்தமிழ் விழாவாக வாணி விழா நடைபெற்றது.
வாணி விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, பண்ணிசை, கோலப் போட்டி, பூமாலை கட்டுதல், பூச்சரம் தொடுத்தல் போட்டியிலும் ஆசிரியர்களுக்கான கோலப் போட்டியிலும் வெற்றியீட்டியவர்களுக்கும், புலமைப் பரிசு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கலைஞர், எழுத்தாளர் லயன். பொன். பத்மநாதன் (ஜே.பீ.) அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இறுதியாக பிரதி அதிபர், இந்து மன்ற பொறுப்பாளர் ஜீ.சரவணராஜ் அவர்களது நன்றியுரையுடனும், வாணி விழா 2022 இனிதே நிறைவு பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM