இலங்கை கடற்படையினரால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்; சர்வதேச கடல் சம்பந்தமான “காலி உரையாடல்” மாநாடு 2016 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (28) முற்பகல் கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் ஆரம்பமானது.
40 நாடுகள், 12 சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமுத்திரப் பாதுகாப்பு தொடர்பான நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இக்கலந்துரையாடலின் கருப்பொருள் “மூலோபாய சமுத்திர தொடர்பை மேம்படுத்தல்” என்பதாகும்.
இக்கலந்துரையாடல் இன்றும் நாளையும் காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறுகின்றது.
சமுத்திர வலய நாடுகளுக்கு பொதுவான அச்சுறுத்தலாக உள்ள அம்சங்கள் தொடர்பாகவும் அவற்றுக்கு ஒன்றிணைந்து முகம் கொடுப்பது தொடர்பாகவும் நடைபெறும் இக்கலந்துரையாடலின் மூலம் தற்போதைய சமுத்திர ரீதியான சவால்களை வெற்றி கொள்வதற்கான பயனுறுதி வாய்ந்த பொறிமுறை ஒன்றை அமைக்கவும், வலய நிபுணர்களின் மூலம் சமுத்திர ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடல் சமுத்திரத்துடன் தொடர்புடைய விடயங்களை கலந்துரையாடுவதற்கும் இதுதொடர்பான அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் எயார் சீப் மார்சல் கோலித குணதிலக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM