(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்..வசீம்)
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் சார் உரிமை பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட கூடாது என குரல் எழுப்புபவர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.
ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு.சிங்கள மக்களிடம் இனியாவது உண்மையை கூறுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு சுதந்திரக்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரச தலைவர்கள்,அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் நாட்டுக்கு ஆற்றிய பணிகள் தொடர்பில் பேசியிருந்தார். எனினும் 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த பின்னர் டி.எஸ்.சேனாநாயக்க இந்திய வம்சாவளி மக்களின் பிராஜாவுரிமையை பறித்தார்.இதுவும் பொருளாதாரப் பின்னடைவுக்கு காரணம்.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு காணிகளை வழங்காது வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்களை அழைத்து வந்து காணிகளை வழங்கினார்கள். மாத்தறை மாவட்டத்தில் அதிகளவானோர் காணிகள் இல்லாதிருக்க மட்டக்களப்பில் உள்ளவர்களுக்கு அங்கு காணிகளை வழங்குவதை மாத்தறை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? இப்போதாவது சிங்கள மக்களுக்கு உண்மைகளை கூறுங்கள். அரசியல்வாதிகளே நாட்டை நாசம் செய்தார்கள்.
1948ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக தீர்வு வழங்கப்படவில்லை. நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காது நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்ததன் பின்னர் நாட்டில் இருந்த ஐரோப்பியர்கள் இலங்கையை கைவிட்டுச் சென்றனர்.
யாழ்ப்பாணத்தில் 95 புள்ளிகளை எடுக்கு மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாது. ஆனால் அதே பரீட்சை வினாத்தாள் எழுதிய மொனராகலை மாவட்ட பிள்ளைகள் வெறும் 50 புள்ளிகளைப் பெற்றால் கூட பல்கலைக்கழகத்துக்கு செல்ல கூடிய நிலை காணப்பட்டது.
வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற தவறுகளே 30 வருடகால யுத்தத்தை தோற்றுவித்தது.. இந்த உண்மைகளை சிங்கள மக்களிடத்தில் சொல்லுங்கள். நீண்ட காலமாக இருக்கும் தமிழ் மக்களின் உரிமைசார் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காது நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது.
யுத்தத்தை நிறைவு செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவோம் என சர்வதேசத்துக்கு இலங்கை வாக்குறுதி வழங்கியிருந்தது. இதனை 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிறைவேற்றவில்லை என்பதாலேயே இலங்கை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டு காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள், காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியைப் பெற்றுக் கொடுங்கள் என எந்தவொரு சிங்கள அரசியல்வாதிகள் சரி கூறுவார்களா? உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலந்தாழ்த்த வேண்டாமென கூறும் எவரும் மாகாணசபைத் தேர்தல் நடைபெறாதிருப்பது தொடர்பில் பேசுவதில்லை.ஏன் நாட்டில் இதுபோன்ற இரட்டை நிலைப்பாடு இரட்டை சட்டம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM