(எம்.மனோசித்ரா)
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து பேருவளை - டயஸ்வத்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 16 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலுள்ள தோட்டத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 8 கிலோ 304 கிராம் ஹெரோயின் கைற்றப்பட்டுள்ளதோடு , இதனுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போதே 16.6 கோடி பெறுமதியுடைய ஹெரோயின் கைற்றப்பட்டுள்ளது. இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடைய பேருவளை - டயஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையுடன் , சந்தேகநபர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM