16 கோடி பெறுமதியுடைய ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

Published By: Digital Desk 3

08 Nov, 2022 | 04:12 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து பேருவளை - டயஸ்வத்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 16 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலுள்ள தோட்டத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 8 கிலோ 304 கிராம் ஹெரோயின் கைற்றப்பட்டுள்ளதோடு , இதனுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போதே 16.6 கோடி பெறுமதியுடைய ஹெரோயின் கைற்றப்பட்டுள்ளது. இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடைய பேருவளை - டயஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையுடன் , சந்தேகநபர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"மலி" யானை மரணம் ; இலங்கையிடம்...

2023-11-29 17:06:54
news-image

இரகசியப் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு :...

2023-11-29 16:58:43
news-image

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

2023-11-29 16:39:27
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு- அமெரிக்க...

2023-11-29 16:56:30
news-image

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞனுக்கு...

2023-11-29 16:52:28
news-image

முன்னாள் விமானப்படை வீரர் சடலமாக மீட்பு...

2023-11-29 16:34:10
news-image

இந்திய பொருளாதார நிபுணர் மொன்டெக் சிங்...

2023-11-29 16:46:07
news-image

புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,...

2023-11-29 16:46:40
news-image

மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை...

2023-11-29 16:36:57
news-image

எப்பாவலவில் ஆற்றில் வீழ்ந்து காணாமல்போனவர் சடலமாக...

2023-11-29 16:33:03
news-image

மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர்...

2023-11-29 16:25:18
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது...

2023-11-29 16:25:09