(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது. உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கில் எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா அரசாங்கத்தின் சதிக்கு சிக்குப்படாமல், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவார் என எதிர்பார்க்கிறோம்.
உள்ளளூராட்சி மன்ற தேர்தல் பாராளுமன்றத்தின் தன்மையை உறுதிப்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் ஏற்கெனவே ஒரு வருட காலம் பிற்போடப்பட்டுள்ளது. ஆகவே 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.
உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்தும் அனைத்து அதிகாரமும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது, ஆகவே தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட வேண்டும்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஒவ்வொரு சதிகளுக்கு சிக்குப்படாமல்,அரசாங்கத்தின் பங்குதாரராகமல் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்துவார் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.
எல்லை நிர்ணயம் அறிக்கையை அடிப்படையாக கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது,134 பாரர்ளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதியாக ஜனாதிபதி பதவி வகிக்கிறார்.தற்போதைய பாரளுமன்றத்திற்கும் மக்களாணை கிடையாது.
பொதுஜன பெரமுனவின் அரசாங்கததின் பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்,நிதியமைச்சராக பதவி வகித்த பஷில் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார்.இவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்கு மக்களாணை முழுமையாக கிடையாது.
மக்களாணையுடன் அரசாங்கம் என்பதொன்று இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக பொருத்தப்பட்ட தரப்பினரை உள்ளடக்கிய அரசாங்கம் தற்போது உள்ளது.
மக்களாணைக்கு முரனாக ஆட்சியை முன்னெடுக்க முடியாது ஆகவே 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட இந்த அரசாங்கம் தகுந்த பாடம் கற்றுக்கொள்ளும்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்றதை தொடர்ந்து பாராளுமன்றத்தின் தன்மை உறுதிப்படுத்தப்படும்,ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM