(எம்.வை.எம்.சியாம்)
அனுராதபுரம் கல்கமுவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதியதில் 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவம் திங்கட்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கல்கமுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குருநாகல்- அநுராதபுரம் பிரதான வீதியில் பாதெனிய விலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டி சாரதி அதில் பயணித்த பெண்கள் இருவர் இரண்டு சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இருப்பினும் இதன் போது பலத்த காயமடைந்த சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 4 வயதுடைய பாலுகந்த, கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவனாவான்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இதன்போது காயமடைந்தவர் அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுதுள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM