கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தை கடன் மறுசீரமைப்பிற்கு சாதகமான தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது - செஹான் சேமசிங்க

Published By: Digital Desk 5

08 Nov, 2022 | 09:51 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கடன் மறுசீரமைப்பிற்காக பிரதான நிலை கடன் வழங்குநர்கள் எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.கடன் வழங்குநர்களுடன் இரண்டாவது சுற்றாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை கடன் மறுசீரமைப்பிற்கு சாதகமான தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பிரதான நிலை கடன் வழங்குநர்களுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கடன் மறுசீரமைப்பு தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எதிர்வரும் மாதம் எட்டுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதும் தவிர்க்க முடியாத காரணிகளினால் அது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தாமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பிற்கான சீனா,இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பிரதான நிலை கடன் வழங்குநர்களுடன் முன்னெடுக்கப்பட்ட முதலாவது கட்ட பேச்சுவார்த்தை சாதகமாக காணப்பட்டது,கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது சட்டம் மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இலங்கையின் சகல கடன் வழங்குநர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும்,அத்துடன் கடன் மறுசீரமைப்பு வெளிப்படை தன்மையுடன் காணப்பட வேண்டும் என பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது.கடன் மறுசீரமைப்பிற்காக பிரதான நிலை கடன் வழங்குநர்கள் உட்பட ஏனைய நாடுகள் நிபந்தனை விதிக்கவில்லை.பொருளாதார மீட்சிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்கள்.

எதிர்வரும் 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டம் அரச வருவாய் அதிகரிப்பிற்கு முன்னுரிமை வழங்கியதாக காணப்படும். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண்பதற்கு ஒருசில கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக காணப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு :...

2025-01-17 16:56:51
news-image

அரிசி பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு...

2025-01-17 22:14:38
news-image

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய பணத் தொகையுடன்...

2025-01-17 21:52:18
news-image

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட "சமஷ்டியே" தேவை!

2025-01-17 21:35:16
news-image

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

2025-01-17 21:07:19
news-image

ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை...

2025-01-17 20:49:36
news-image

போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்...

2025-01-17 17:32:28
news-image

முல்லை பொதுவைத்தியசாலையின் வளப் பற்றாக்குறைதொடர்பில் சுகாதார...

2025-01-17 18:38:43
news-image

தெற்கில் பாதிக்கப்பட்டவர்களும் எம்மைப்போன்றவர்களே - லீலாதேவி...

2025-01-17 18:20:35
news-image

மறுசீரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற...

2025-01-17 18:11:05
news-image

ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில்...

2025-01-17 17:49:03
news-image

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமம்...

2025-01-17 17:34:46