உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருடன் பேச்சு - பெப்ரல் நிறைவேற்று பணிப்பாளர்

Published By: Digital Desk 2

06 Nov, 2022 | 09:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் முறைமை திருத்தம்,எல்லை நிர்ணய அறிக்கை ஆகிய காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை அரசாங்கம் பிற்போட முயற்சித்தால்  அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம் என சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு (பெப்ரல்) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராட்சி தெரிவித்தார்.

எல்லை நிர்ணய குழு நியமனம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசியல் களத்தில் மாறுப்பட்ட பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.

எல்லை நிர்ணய குழு நியமனம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு ஒரு காரணியாக அமைந்து விடக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.

Executive Director Rohana Hettiarachchi Archives - SLBC News ( Sinhala )

தேர்தல் முறைமை திருத்தம் செய்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு அவதானத்திற்குரியது. 2018 ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து மாகாண சபை தேர்தலை நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது, இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது.

09 மாகாண சபைகளும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயற்படுகிறது. ஜனநாயகம் தொடர்பில் கருத்துரைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது அவசியமற்றது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் செயற்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெறுகிறது.

தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும்,ஆனால் அதற்கான தருணம் இதுவல்ல, நாட்டு மக்கள் தேர்தலை கோருகிறார்கள். இவ்வருடம் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை ஒரு வருட காலம் பிற்போடப்பட்டது. நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்குள் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் முறைமை திருத்தம், எல்லை நிர்ணய அறிக்கை ஆகிய காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம். உள்ளுராட்சி மன்ற சபை தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் நாளை விசேட பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07