தும்பு உற்பத்தியாளர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் ரிஷாத்துடன் கலந்துரையாடல்

Published By: Vishnu

06 Nov, 2022 | 04:16 PM
image

புத்தளம், மதுரங்குளி தும்பு உற்பத்தியாளர்களுக்கும், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு, 05 ஆம் திகதி சனிக்கிழமை விருதோடை பகுதியில் இடம்பெற்றது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, தும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ரிஷாட் எம்.பி கூறியதாவது,

"புத்தளம் மாவட்டத்தில் வாழ்கின்ற தும்பு உற்பத்தியாளர்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.

அவர்களின் உற்பத்திப் பொருட்களை, ஏற்றுமதியாளர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் என்ன விலையில் வாங்கினார்களோ, அதே விலையிலேதான் தற்பொழுதும் வாங்குகின்றனர்.

ஒரு சில ஏற்றுமதியாளர்கள், தும்பு உற்பத்தியாளர்களை அடக்கி, ஒடுக்கி தமது ஏகபோக உரிமைகளை நிலை நாட்ட முற்படுகின்றனர்.

இதனால் சாதாரண உற்பத்தியாளர்களும் அவர்களை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களும் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். 

மேலும், ஏற்றுமதியாளர்கள் தும்பு உற்பத்திப் பொருட்களுக்கான உரிய விலையை வழங்காமல் இழுத்தடிப்புச் செய்வதனால் , உற்பத்தியாளர்கள் தமது தொழிலை முன்கொண்டு செல்ல முடியாமல் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இதன் காரணமாக, இலங்கைக்கு பல மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொடுக்கும் இந்த தும்பு உற்பத்தித் துறையானது, இல்லாமல் போகின்ற ஆபத்தான நிலை தென்படுகின்றது.

எனவே, அரசாங்கம், கைத்தொழில் அமைச்சு, ஏற்றுமதி அதிகார சபை ஆகியன இந்த விடயத்தில் தலையீடு செய்வதன் மூலமே, தும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்" என்று கூறினார்.

அத்துடன், தும்பு உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கான சரியான விலையை நிர்ணயித்து வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்பதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55
news-image

330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட...

2023-03-21 16:50:04