மோட்டார் சைக்கிளொன்று படி ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பிரதான வீதியில் நேற்றிரவு (நவ 5) 9.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பகுதியிலுள்ள மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, பாலைநகரிலுள்ள தனது வீட்டுக்கு கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த படி ரக வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மனைவி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் பாலைநகர் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய உசனார் ஆமினா உம்மா என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த கணவர் ஆதம் பாவா உசனார் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் படி ரக வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM