bestweb

நிலைமைகள் மோசமாவதைத் தடுப்பதற்கு மத்திய குழுவைக் கூட்டுகிறார் மாவை

Published By: Digital Desk 2

06 Nov, 2022 | 11:57 AM
image

(ஆர்.ராம்)

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல் நிலைமைகள் மேலும் மோசமாவைத் தடுப்பதற்காக அவசரமாக மத்திய குழுக் கூட்டத்தினை கூட்டுவதற்கு அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தீர்மானித்துள்ளார்.

மத்திய குழு கூட்டத்தினை அவசரமாக கூட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, தற்காலிக செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்தும் உள்ளார்.

இதுதொடர்பில் மாவை.சோ.சேனாதிராஜா மேலும் தெரிவிக்கையில், 

மாவை சேனாதிராஜாவுடன் கனடா தமிழரசு கட்சி உறுப்பினர்கள் அவசர சந்திப்பு! -  Eelanadu

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் பகிரங்க வெளியில் கருத்துக்களை வெளிப்படுத்துவது பற்றி எனது கவனத்திற்கு பல்வேறு தரப்பினராலும் கொண்டுவரப்பட்டுள்ளது. 

அந்தவகையில், கட்சியின் விதிகளுக்கு அமைவாகவும், பொதுவிதிகளுக்கு அமைவாகவும், இந்த விடயம் சார்ந்து விரிவான கலந்துரையாடல்களைச் செய்வதற்கு மத்திய குழுக் கூட்டத்தினை கூட்டுமாறு செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். 

அத்துடன், உறுப்பினர்கள் பகிரங்க வெளியில் கருத்துக்களை வெளிப்படுத்துவது தொடர்பில், கட்சித்தலைவர் என்ற அடிப்படையில் கரிசனை கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான விடயமாகும்.

இவ்விதமான செயற்பாடுகளால், கட்சியின் பொதுமக்களுக்கான எதிர்காலச் செயற்பாடுகளும், கூட்டுப்பொறுப்பும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் அவதானம் செலுத்தியுள்ளேன் என்றார். 

கட்சிமாநாடு

இதேவேளை, கட்சியின் மாநாடு தொடர்பிலும் மத்திய குழுவில் கலந்துரையாடப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே கட்சியின் மாநாட்டினை டிசம்பர் 18ஆம் திகதி நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கட்சியின் கிளைகள் புனரமைக்கப்பட்டு மீளக் கட்டப்பட்டு வருகின்றன. 

எதிர்வரும் நாட்களில், வட,கிழக்கு மாகாணத்தில் உள்ள எமது கட்சிக் கிளைகளுக்கு தொடர்ச்சியாக விஜயங்களைச் செய்து நிலைமைகளை அவதானிக்கவுள்ளேன். தொடர்ந்து திட்டமிட்ட திகதியில் மாநாட்டை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

அதுமட்டுமன்றி குறித்த மாநாட்டிலேயே கட்சியின் பதவி நிலைகளை பொதுக்குழு தீர்மானிக்கவுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை...

2025-07-18 10:23:21
news-image

நான்கு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

2025-07-18 10:12:33
news-image

தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத...

2025-07-18 10:14:53
news-image

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில்...

2025-07-18 10:07:11
news-image

கடத்தப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்

2025-07-18 09:27:11
news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19