பொலிஸார் உடல் ரீதியில் இடையூறு: ஹிருணிகா உள்ளிட்ட 3 பெண்கள் முறைப்பாடு

Published By: Digital Desk 5

05 Nov, 2022 | 06:18 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஆர்ப்பாட்டத்தின் இடையே பொலிஸார் தமக்கு தேவையற்ற விதத்தில் உடல் ரீதியிலான இடையூறுகளை விளைவித்ததாக கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவு தலைவி ஹிருணிகா பிரேமசந்ர உள்ளிட்ட 3 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அவர்கள் இவ்வாறு எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி மருதானை எல்பிஸ்டன் திரையரங்கு அருகே இருந்து அரசாங்கத்தின் அடக்கு முறை போக்கை உடனடியாக நிறுத்தக் கோரியும் , பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்ட பேரணி நடாத்தப்பட்டது.

இதன்போதே பொலிஸார் இவ்வாறு உடல் ரீதியிலான  இடையூறுகளை தமக்கு விளைவித்ததாக ஹிருணிகா உள்ளிட்டோர், சில பொலிசாரின் சீருடை இலக்கங்கள், வீடியோக்களையும் இணைத்து இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முன் வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30