எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான வாகனங்களின் வரிசை திங்கட்கிழமையுடன் குறையும்

Published By: Digital Desk 3

05 Nov, 2022 | 01:38 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான வாகனங்களின் வரிசை திங்கட்கிழமைக்குள் குறைந்துவிடும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருளின் விலை குறையும் என எண்ணி கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எம்மிடம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை.

இதன் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

கியூ ஆர் மூலம் எரிபொருள் நிரப்பப்படுவதால், நாளாந்தம் சுமார் 4,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை பெறுவதற்கு முன்னர், வங்கி ஊடாக கட்டணத்தை செலுத்தப்பட வேண்டியுள்ளதால், அதுவும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் வரைக்குமான போதுமானளவு டீசல் இருப்பதாகவும், சுமார் 20 நாட்களுக்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதாகவும், தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பலிலுள்ள 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் அடுத்த வாரத்திற்குள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38