மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்குச் செல்லும் பெண்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்

Published By: Nanthini

04 Nov, 2022 | 04:38 PM
image

(எம்.ஆர்.எம். வசீம்)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழில் முகவர் நிறுவனங்கள் வழியாக வீட்டுப்பணிப்பெண் மற்றும் பயிற்சியளிக்கப்படாத தொழில்களுக்காக அனுப்பப்படும் பெண்களுக்கு பதிவு செய்துகொள்வதற்காக இதுவரை வழங்கப்பட்டிருந்த அனுமதியானது உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள இலங்கை தூதரகத்தினால், அந்நாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்கள் தொடர்பாக பணியகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மூலம் அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசா மூலமே அந்த நாடுகளுக்கு வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

அத்துடன் அந்த பெண்களுக்கோ அல்லது அவர்களது தொழில்களுக்கோ பொறுப்பேற்க எந்தவொரு நிறுவனமோ அல்லது நபரோ முன்வராததால், குறித்த பெண்கள் அந்நாட்டில் கைவிடப்பட்டவர்கள் போல் காலம் கடத்தி வருகின்றனர். 

இதனால் அவர்களை மீண்டும் இந்த நாட்டுக்கு அழைத்துவருவதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

இதன் பிரகாரம், தொழில்களுக்காக செல்லும் பெண்கள் தொழில் விசா அனுமதிப்பத்திரத்தின் கீழ் வெளிநாட்டுக்குச் செல்வது கட்டாயம் எனவும் சுற்றுலா விசா ஊடாக தொழில் வாய்ப்புக்களுக்கு செல்ல மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணியக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேவேளை டுபாய், அபுதாபி உட்பட ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அனைத்து பிரதேசங்களிலும் வீட்டுவேலை மற்றும் பயிற்சியற்ற தொழிலுக்காக பெண்களை நியமித்தல், சுற்றுலா விசா ஊடாக பணி நிமித்தம் வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சித்தல் போன்ற நடவடிக்கைகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19
news-image

அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை...

2025-03-16 10:13:42
news-image

ஏப்ரல் 10ம் திகதி பட்டலந்த விசாரணை...

2025-03-16 09:49:47
news-image

மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான...

2025-03-16 09:47:17