(இராஜதுரை ஹஷான்)
2023 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மொட்டு சின்னத்தை முன்னிலைப்படுத்தி போட்டியிடுவோம்.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசியல் கூட்டணி வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பல சவால்களை கடந்துள்ளது.அரசியல் ரீதியில் எடுக்கப்பட்ட ஒருசில தீர்மானங்கள் நாட்டின் நலனை மையப்படுத்தியதாக காணப்பட்டாலும்,அது சூழ்நிலைக்கு பொருத்தமற்றதாக அமைந்ததால் பல நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிட்டது.
நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய பொதுஜன பெரமுன மறுசீரமைக்கப்படும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியுன் கூட்டணியமைத்து எதிர்வரும் காலங்களில் போட்டியிட உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்களாணை கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே ஆகவே மக்களாணை இல்லாத ஒரு கட்சியுடன் எவ்வாறு கூட்டணி அமைத்து போட்டியிடுவது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.
ஐக்கிய தேசிய கட்சி தமக்கான மக்கள் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கும்,ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இன்றும் மக்கள் செல்வாக்கு உண்டு.
எதிர்வரும் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மொட்டு சின்னத்தை முன்னிலைப்படுத்த போட்டியிடுவோம்.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசியல் கூட்டணி வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM