அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சிக்கு எதிராக மாறியது : ருவன் விஜேவர்த்தன

Published By: Digital Desk 2

03 Nov, 2022 | 05:14 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டை மேலும் வீழ்ச்சியடைவதற்கு மக்கள் தயாரில்லை. அதனால்தான் அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இறுதியில் எதிர்க்கட்சிக்கு எதிராக மாறியது.

அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக கூச்சலிட்டமை தொடர்பில் கவலையடைகின்றேன் என ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி ஊடக பிரிவை அங்குரார்ப்பணம் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிய சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றார். மக்கள் ஆரம்பத்தில் எதிர்கொண்டுவந்த பல பிரச்சினைகளுக்கு ஓரளவேனும் தீர்வு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. குறிப்பாக எரிபொருள், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு நீண்ட நாட்கள் வரிசையில் இருந்துவந்த யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். இதனால் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது.

Ruwan arrives at PCoI on political victimization

அதனால் மக்கள் தற்போது ஆர்ப்பாட்டம் போராட்டங்களை விரும்பவில்லை என்பது  அரசாங்கத்துக்கு எதடிராக காெழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மூலம் விளங்கிக்கொள்ள முடியுமாகி இருக்கின்றது.

எதிர்க்கட்சிகளால் அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதும் இறுதியில் அது எதிர்க்கட்சிக்கு எதிராகவே மாறியது.

அத்துடன் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்க வந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராகவும் கூச்சலிடப்பட்டது. இதுதொடர்பில் நாங்கள் கலவையடைகின்றோம். ஏனெனில் எதிர்க்கட்சித் தலைவர் என்பது நாட்டின் 4ஆவது பிரஜை.

மேலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்துவதே தற்போதுள்ள பொறுப்பாகும், மக்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர்.

அதற்காக கட்சி பேதங்களை மறந்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும். மாறாக நாட்டின் தற்போதைய நிலைமைய பயள்படுத்திக்கொண்டு யாரும் அரசியல் செய்ய முற்பட்டால் நாட்டை பாதுகாக்க முடியாமல் போகும்.

அதனால் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு யாரும் அரசியல் லாபம் தேடி முற்பட்டால் அவர்களை மக்கள் நிராகரிக்கும் நிலையே தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் எமது அரசியல் நடவடிக்கைகளை தற்காலிகமாக விட்டு, விட்டு நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். நாடு ஸ்திரமானதொரு நிலைக்கு வந்த பின்னர் நாங்கள் எமது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கள குடியேற்றத்துக்காக தமிழர் தாயகம் இராணுவத்தினரால்...

2023-03-21 19:48:06
news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55