தளர்ந்த சருமத்துக்கு ஆட்டுப்பால்

Published By: Devika

03 Nov, 2022 | 09:54 AM
image

ருமத்தின் அழகையும், மிருது­வான தன்மையையும், பொலிவை­யும் பராமரிப்பதற்கு உதவும் இயற்கை­யான பொருள் ஆட்டுப்பால். சரு­மத்­தின் ஆரோக்கியத்தை காக்­கும் ஆட்­டுப்­பாலை முகத்தில் பூசி வந்­தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்­போம். 

சத்துக்கள்: ஆட்டுப்பாலில் புரதம், கல்சி­யம், பொட்டாசியம், ஒமேகா-6, விட்ட­மின் ஏ, சி மற்றும் ஈ, மெக்னீ­சியம், பொஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்­துள்ளன. 

சருமத்தை மிருதுவாக்கும்: சென்சிடிவ் மற்றும் வறட்சியான சருமம் கொண்ட­வர்களின் முகம் எளிதாக பொலிவை இழக்கும். இவர்களுக்கு ஆட்டுப்பால் சிறந்த தீர்வாக அமையும். இது தோல் அழற்சி, அரிப்பு ஆகியவற்றை குணப்­படுத்தும். இதில் இருக்கும், லாக்டிக் அமி­லம் சருமத்துக்குள் எளிதாக ஊடு­ருவி தோலை மிருதுவாகவும், மென்மை­யாகவும் மாற்றும். வறண்ட மற்றும் சேதமடைந்த சருமத்தை சீராக்கும். சருமத்தின் அடுக்குகள் கொழுப்பு மற்றும் செலினியம் மூலக்கூறுகளைக் கொண்டவை. இவற்றில் குறைபாடு ஏற்பட்டால், சருமம் விரைவில் வறட்சி அடையும். ஆட்டுப்பாலில் இருக்கும் கொழுப்பு மற்றும் செலினியம் சத்துக்­­கள் இந்தப் பிரச்சினையை தீர்க்­கின்­றன. 

ஆழமாகப் பரவும்: சருமத்துக்கு அவ­­சிய­­மான கொழுப்பு அமிலங்கள் ஆட்­டுப் பாலில் உள்ளன. இதனை ஒவ்­வொரு முறை பயன்படுத்தும்­ போதும், சருமத்தில் ஆழ­மாக ஊடுருவி செயல்படும். ஆட்­டுப் பாலில் உள்ள புரோட்டீன், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது முகப்பருவை உரு­வாக்கும் பக்டீரியாக்­களை அழிக்­கிறது. சருமத்திற்குத் தேவையான ஈரப்­பதத்தைத் தருகிறது. மேலும் இதில் இருக்கும் விட்ட­மின் ஏ, சி, ஈ மற்றும் அன்டிஆக்­சிடன்­டுகள் சருமத்­திற்கு ஊட்டம் அளித்து சருமத்­தின் இளமையை பாது­காக்­கின்றன. 

அதிகமான எண்­ணெய்ச் சுரப்பை கட்டுப்­படுத்துகிறது. ஆட்டுப்­பாலை நேரடியாக சரு­மத்தில் பூசும்போது இறந்த செல்கள் நீங்­கும். தளர்ந்த சருமம் இறுக்கமாகும். ஆட்டுப்­ பாலை பயன்­படுத்து­வதற்கு முன்பு, சிறிது சருமத்தில் தடவி எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்­கொள்வது நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்