மன்னார்
(மன்னார் நிருபர்)
அனைத்து ஆத்மாக்கள் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க மக்களும் நேற்று புதன்கிழமை (நவ 2) தமது உறவுகள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மன்னார் பேசாலையில் உள்ள கத்தோலிக்க சேமக்காலையில் நேற்று மாலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன்போது பேசாலை மக்கள் உயிர் நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பல கத்தோலிக்க மற்றும் பொது சேமக்காலையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
நீர்கொழும்பு
நீர்கொழும்பு நகரில் சகல ஆத்மாக்கள் தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க மக்கள் இறந்த தமது உறவுகளின் கல்லறைகளுக்குச் சென்று நேற்றைய தினம் புதன்கிழமை (நவ 2) வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று பலத்த மழைக்கு மத்தியிலும், தமது உறவினர்கள், நண்பர்களின் கல்லறைகளுக்குச் சென்று, இறந்தவர்களை நினைவுகூர்ந்து வழிபாடு நடத்தினர்.
பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலிலும், மலர்க் கொத்துக்கள் வாங்கி, அவற்றை கல்லறைகளில் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்காக மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
அத்துடன் நீர்கொழும்பு மஞ்சொக்காஹேன பொது மயானம் மற்றும் கடற்கரை தெரு றோமன் கத்தோலிக்க மயானத்தில் நடாத்தப்பட்ட இறைவணக்க நிகழ்வுகளிலும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM