ஆர்ப்பாட்டங்கள், அவசர நிலைமைகளை கையாளல் : பொலிஸுக்கு ஆலோசனை வழங்க சட்ட மா அதிபரின் கீழ் சிறப்பு குழு

Published By: T. Saranya

02 Nov, 2022 | 09:26 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அவசர நிலைமைகளின் போது பொலிஸாரின் செயற்பாட்டுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க, சட்ட மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில்  சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய, சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் நேரடி மேற்பார்வையில் செயற்படும் வண்ணம், சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான , சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்நாயக்க பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மாலி கருணாநாயக்க ஆகியோரை உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பிரியந்த நாவானா கையெழுத்திட்டு தொலைபேசி இலக்கங்களையும் உள்ளடக்கி விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அதன்படி, பொலிஸார் எந்தவொரு அவசர நிலைமையின் போதும், குறித்த மூன்று சட்ட அதிகாரிகளையும் அவரகளது கையடக்கத் தொலைபேசிக்கு அழைத்து உடனடியாகவே ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  ஏப்ரல் 12 ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஆகிய தினங்களில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன முன் வைத்த கோரிக்கைகளுக்கு அமையவே, இந்த உடனடி ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு  வழங்கும் குழு சட்ட மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிப எஸ். எம். விக்ரமரத்னவால் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான  தேசபந்து தென்னகோன், பிரியந்த வீரசூரிய,  சஞீவ தர்மசேன, டப்ளிய்யூ. கே. ஜயலத்,  ராஜித்த ஸ்ரீ தமிந்த, எப்.யூ. பெர்ணான்டோ,  லலித் பத்திநாயக்க, அஜித் ரோஹன,  கே.பி.எம். குணரத்ன ( 9 மாகாணங்கலுக்கும் பொறுப்பானவர்கள் ) ஆகியோருக்கு அரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டின் எந்தவொரு பகுதியிலும் ஏதாவது ஆர்ப்பாட்டங்கள், அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் பொலிஸார் நேரடியாக, உடனடியாக குறித்த மூன்று சட்ட அதிகாரிகலின் அலஓசனைகலைப் பெற்றுக்கொள்ள முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55
news-image

330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட...

2023-03-21 16:50:04