வரவு - செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதியில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை

Published By: Digital Desk 3

01 Nov, 2022 | 05:00 PM
image

(செய்திப்பிரிவு)

பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுகின்ற தினங்களிலும், வரவு - செலவுத்திட்ட விவாதம் இடம்பெறுகின்ற காலப்பகுதியிலும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 14 ஆம் திகதி  திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் எதிர்வரும் 15 - 21 ஆம் திகதி வரை நடைபெற்று, 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடாத்தப்படும்.

அதேபோன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை நடைபெறவிருப்பதுடன் அதன்மீதான வாக்கெடுப்பை டிசம்பர் 8 ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுகின்ற தினங்களிலும், வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசர மருத்துவ தேவைக்களுக்காக அல்லது அரசின் அவசர பணிகளுக்கான சந்தர்ப்பங்கள் தவிர, பாராளுமன்றம் கூடுகின்ற தினங்களிலும் வரவு - செலவுத்திட்ட விவாதம் இடம்பெறுகின்ற காலப்பகுதியிலும் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; புத்தளத்திற்கு...

2025-03-27 12:56:16
news-image

கோடாவுடன் சந்தேகநபர் கைது !

2025-03-27 12:54:48
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்கு தள்ளி...

2025-03-27 13:01:21
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55