(எம்.வை.எம்.சியாம்)
குருநாகல் - எகெட்டுவ பிரதேசத்தில் குளத்தில் நீராடச் சென்ற இராணுவ சிப்பாய் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் 29 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய கிரிகம்பமுனுவ, பொல்கஸோவிட்ட பிரதேசத்தைச் சேர்நதவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த சிப்பாய் பனாகொட இராணுவ முகாமிலிருந்து அநுராதபுர முகாமிற்கு மேலும் சில சிப்பாய்களுடன் சென்ற போது , அங்கிருந்த குளமொன்றில் நீராட சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக எஹெட்டுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் எகெட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM