ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் ஒருவர் கைது

Published By: Vishnu

30 Oct, 2022 | 07:12 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபரொருவர் 29 ஆம் திகதி சனிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போது கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் புகைப்பட மொன்றினை அடிப்படையாக கொண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 62 வயதுடைய , ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23