பாடசாலை மாணவன் மீது துப்பாக்கிப் பிரயோகம்: விசாரணை அறிக்கை தலைமை அலுவலகத்திடம் சமர்ப்பிப்பு

Published By: Vishnu

30 Oct, 2022 | 01:24 PM
image

(எம்.மனோசித்ரா)

மாத்தறை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவனுடன் முச்சக்கரவண்டியில் சென்ற பிரிதொரு மாணவனிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பில் மாத்தறையிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேரடி தலையீட்டுடன் கடந்த வெள்ளிக்கிழமை திஹகொட - நாயிம்பல பிரதேசத்தில் பாடசாலை மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் நேற்று சனிக்கிழமை சம்பவ இடம் பார்வையிடப்பட்டதோடு , முச்சக்கரவண்டியில் சென்ற ஏனைய மாணவனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதன் போது அப்பிரதேச மக்களையும் சந்தித்து கலந்துரையாடிய அலுவலக அதிகாரிகள் , அவர்களிடம் அமைதியாக செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு , விசாரணைகளின் முடிவுகள் , பொறுத்தமான பரிந்துரைகளுக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40