போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்

Published By: Nanthini

28 Oct, 2022 | 02:46 PM
image

(எம். நியூட்டன்)

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான  விழிப்புணர்வு செயற்றிட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை (ஒக் 28) யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல்களை தவிர்ப்பதற்கு மாணவர்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில் இச்செயற்றிட்டம் இடம்பெற்றது. 

எதிர்காலத்தில் இந்த செயற்றிட்டம் வடக்கு, கிழக்கு, மலையகம் தழுவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right