யால தேசிய பூங்காவில் இடம்பெற்ற சம்பவத்திற்கும் எனது மகனிற்கும் தொடர்பில்லை - அமைச்சர் அமரவீர

Published By: Rajeeban

28 Oct, 2022 | 10:59 AM
image

யால தேசிய பூங்காவிற்குள் வாகனங்களை கண்மூடித்தனமாக செலுத்தி விலங்குகளிற்கு ஆபத்தை ஏற்படுத்திய குழுவினரில் தனது மகனும் காணப்பட்டதாக வெளியான செய்திகளை அமைச்சர் மகிந்த அமரவீர  நிராகரித்துள்ளார்.

கடந்த பத்து நாட்களாக எனது மகன் கொழும்பிலிருந்து வெளியே செல்லவில்லை  மத்துகமவில் உள்ள உறவினர் வீட்டிற்கு மாத்திரம் சென்றார் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தனக்கு கிடைத்த தகவல்களின் படி குறிப்பிட்ட நபர்கள் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக வேக கட்டுப்பாடுகளை மீறி அதிவேகத்தில் வாகனங்களை செலுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு இது குறித்த வீடியோக்கள் கிடைத்தவேளை நான் வெளிநாட்டிலிருந்தேன் நான் பொலிஸ்மா அதிபருடன்  பேசினேன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களிற்கு எதிராக அவர்களுடைய சமூக அந்தஸ்த்தை  கருத்தில் எடுக்காமல் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் நான் அமைச்சின் செயலாளருடன் பேசி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன் என தெரிவித்துள்ள அமைச்சர் பின்னர் நான் எனது மகனை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தேன் அவர் தனது தனிப்பட்ட வாகனச்சாரதியுடன் வெளியே சென்றிருப்பதை உறுதி செய்தேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் கடந்த பத்து நாட்களாக கொழும்பிலிருந்து வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பதை உறுதி செய்தேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவருக்கு இதில் தொடர்பில்லை என்பதையும் உறுதி செய்தேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17
news-image

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட...

2026-08-08 16:46:20
news-image

அல்லைப்பிட்டிச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து...

2026-08-08 16:39:43
news-image

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்...

2026-08-08 16:22:27