(எம்.எப்.எம்.பஸீர்)
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை இழிவளவாக்கி கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காமை ஊடாக அரசு அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் இனிமேல் ஆஜராக போவதில்லை என சட்டமாதிபர் உயர் நீதிமன்றுக்கு நேற்று (27) அறிவித்தார்.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது சட்டமாதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பாரிந்த ரணசிங்க இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.
குறித்த மனுவானது உயர்நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட,ஏ.எச்.என்.டி நவாஸ் மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது, மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பாரிந்த ரணசிங்க மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஜனாதிபதி பதவி வகிக்காத நிலையில் அவருக்காக இனிமேல் இந்த மனுவில் சட்டமாதிபர் ஆஜராகமாட்டார் என அறிவித்தார்.
எனினும் இந்த மனு தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க அவகாசம் அளிக்குமாறு அவர் மத்திய சுற்றாடல் அதிகார சபை சார்பாக நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தார்.
எனினும் குறித்த கோரிக்கைக்கு மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ரவிந்திரநாத் தாபரே கடும் ஆட்சேபனை முன்வைத்தார்.
எனினும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க சட்டமாதிபருக்கு இருவார காலவகாவசத்தை நீதியரசர்கள் வழங்கினர்.
அதன்படி, இந்த மனுவானது எதிர்வரும் 2023 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி மீள பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM