(என்.வீ.ஏ.)
இங்கிலாந்துக்கு எதிராக ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை (ஒக் 28) நடைபெறவுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணியில் இரண்டாவது வீரருக்கு கொவிட் அறிகுறி இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பரம வைரிகளான இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளன.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் மூத்த விக்கெட் காப்பாளர் மெத்யூ வேடுக்கு கொவிட் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு இலேசான அறிகுறிகளே இருப்பதால் இங்கிலாந்துடனான போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது சக அணி வீரர் சுழல்பந்து வீச்சாளரான அடம் ஸம்ப்பாவும் இந்த வார ஆரம்பத்தில் சிறிதளவு கொவிட் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக இலங்கைக்கு எதிராக பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை.
எனினும், இங்கிலாந்துடனான போட்டியில் அடம் ஸம்ப்பா விளையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
வேடுக்கு தொடர்ந்தும் சிறிய அளவிலான கொவிட் அறிகுறி இருந்தால், அவரும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, அவுஸ்திரேலிய அணியில் பதில் விக்கெட் காப்பாளர் ஒருவர் இல்லாததால் க்லென் மெக்ஸ்வெல் விக்கெட்காப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM