திரைப்பட தொழிலாளர்கள் சென்னையில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
தென்னிந்திய சினிமா ஒளிப்பதிவாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அதன் தற்போதைய தலைவர் பி.சி.ஸ்ரீராம் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன்பு புகார் மனு கொடுத்தார். சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் என்.கே.விஸ்வநாதன், ஜி.சிவா, செல்வராஜ் ஆகியோர் மலேசியாவில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி தொடர்பாக முறையாக கணக்கு காட்டவில்லை என்றும், ரூ.77.50 இலட்சத்துக்கு முறைகேடு நடந்துள்ளது என்றும் புகாரில் கூறி இருந்தார்.
இதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் ஜி.சிவா தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது குற்றம் சாட்டியதை கண்டித்து திரைப்பட தொழிலாளர்கள் நேற்று சென்னையில் நடந்த படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் வேலை நிறுத்தம் செய்தனர்.
இதனால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. ஸ்டூடியோக்களில் நடந்த படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. பாடல் பதிவு, எடிட்டிங், டப்பிங், உள்பட சினிமா சம்பந்தப்பட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வெளியூர்களில் நடந்த படப்பிடிப்புகள் மட்டும் வழக்கம்போல் நடந்தன.
இதுகுறித்து திரைப்பட தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் கூறும்போது, “எங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜி.சிவா மீது ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதை கண்டித்து சென்னையில் மட்டும் திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 20 படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.
ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்புக்கு வெளியூர்களில் இருந்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் வந்து இருந்ததால் அதன் படப்பிடிப்பு பாதிக்க வேண்டாம் என்ற நோக்கத்தில் மதியத்துக்கு மேல் படப்பிடிப்பை நடத்த ஒத்துழைப்பு அளித்தோம்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM