(என்.வீ.ஏ.)
நியூஸிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (26) நடைபெறவிருந்த ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

ஆட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளும் 2 புள்ளிகளைப் பகிர்ந்துகொண்டன.
இந்தப் போட்டியுடன் குழு 1இல் இடம்பெறும் 6 அணிகளும் சுப்பர் 12 சுற்றில் இரண்டாம் கட்டப் போட்டிகளை நிறைவுசெய்துள்ளன.
இதற்கு அமைய குழு 1க்கான அணிகள் நிலையில் நியூஸிலாந்து 3 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது.
அதேவேளை, அயர்லாந்துடனான போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததை அடுத்து அணிகள் நிலையில் இலங்கை 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அணிகள் நிலையில் தற்போது முறையே முதல் 3 இடங்களில் உள்ள நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து மற்றும் 5ஆம் இடத்திலுள்ள அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் அரை இறுதிகளுக்கு முன்னேறு வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ளக்கூடிய தீர்மானம் மிக்க போட்டிகள் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் நடைபெறவுள்ளன.
அத்தடன் அணிகள் நிலையில் 4ஆம் இடத்திலுள்ள அயர்லாந்துக்கும் கடைநிலையில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டி வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளன.
குழு 1 அணிகள் நிலை (26-10-2022 வரை)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM