பயங்கரவாத தடுப்புப் பிரிவின் காவலில் இருந்த கல்வெவ சிறிதம்ம தேரருக்கு டெங்கு

Published By: Digital Desk 5

26 Oct, 2022 | 05:13 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவுடன் கைது செய்யப்பட்ட   அனைத்து பல்கலைக் கழக பிக்குகள் ஒன்றியத்தின்  ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்ப்ட்டுள்ளமை கண்டறியப்ப்ட்டுள்ளது. 

கடும் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கல்வெவ சிறிதம்ம தேரர் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு முன்னெடுக்கப்ப்ட்ட பரிசோதனைகளின் போது டெங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்ப்ட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் உள்ள தங்காலை, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு  குறித்த தேரர் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவரை அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 கடுமையான காய்ச்சல் காரணமாக அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேசிய வைத்தியசாலையின் 49 ஆவது சிகிச்சை அறையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக  தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.

 நாட்டில் ஜனாதிபதி பதவி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களாக விளங்கிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகிய மூவரையும்  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டிருந்தது. 

எனினும் விசாரணையின் இடையே ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க 50 நாள் தடுப்புக் காவலின் பின்னர் சான்றுகள் எனக் கூறி விடுவிக்கப்பட்டார்.

 எனினும் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் 65 நாட்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன, மத சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படும்...

2025-02-10 17:47:02
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18