(எம்.மனோசித்ரா)
பக்கவாத நோய் காரணமாக இலங்கையில் வருடாந்தம் 60,000 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அதேவேளை அவர்களில் 4000 பேர் உயிரிழக்கின்றனர்.
இவர்கள் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளாமையே இந்த உயிரிழப்புகளுக்கான காரணம் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சமிந்தி சமரகோன் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை (ஒக் 26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
எனினும், தற்போது அந்த நிலைமை படிப்படியாக சீராகி வருகிறது.
பக்கவாதத்துக்கு பிரதான காரணம் உயர் இரத்த அழுத்தமாகும். எனவே, குறைந்தபட்சம் வருடத்தில் ஒரு தடவையாவது அருகிலுள்ள வைத்தியசாலைகளில் இரத்த அழுத்தத்தினை பரிசோதித்துக்கொள்வது அவசியமாகும்.
இலங்கையில் வருடாந்தம் 60,000 பேர் பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் சுமார் 4000 பேர் துரித சிகிச்சைகளை பெறாமல் உயிரிழக்கின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM