கடன் மறுசீரமைப்பு விவகாரம் : இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகளுடன் ஆரோக்கியமான பேச்சு – அரசாங்கம்

Published By: Digital Desk 5

26 Oct, 2022 | 01:35 PM
image

(எம்.மனோசித்ரா)

கடன் மறுசீரமைப்பு விவகாரங்களில் அரசாங்கமானது இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

நாட்டின் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரமான நிலைமைக்குக் கொண்டு செல்வது குறித்து ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன , ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை போன்ற சர்வதேச ஒத்துழைப்புக்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (26) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் , கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தற்போது நாடு எதிர்கொண்டுள்ள தேசிய நெருக்கடியாகவுள்ளது.

சுதந்திரத்தின் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து நாடுகளும் வெளிநாடுகளிடம் கடன் பெற்றுள்ளன. அவ்வாறு கடன் பெறாமல் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது.

இவ்வாறு பெற்ற கடன்களை மீள செலுத்துவதற்காக மேலும் மேலும் கடன் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்தக் கடன்களையும் செலுத்த முடியாத நிலைமை ஏற்படும் போது சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது கட்டாயமாகவுள்ளது.

அதற்கமைய எமது தேசிய கடமையாக கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை ஈடுபாட்டுடன் முன்னெடுத்து வருகின்றோம்.

இதற்காக அரசாங்கத்தின் சார்பில் கிளிபர்ட் ஹான்ஸ் மற்றும் லசார்ட் ஆகிய நிறுவனங்களும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.

கடந்த வாரம் வாஷிங்டனில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டிலும் இலங்கை கலந்து கொண்டிருந்தது. இது தொடர்பில் மத்திய வங்கி தெளிவுபடுத்தும்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் வெளிநாட்டலுவல்க்ள அமைச்சு, வர்த்தக அமைச்சு உள்ளிட்டவை ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றன. 

இலங்கை அரசாங்கத்தினால் மனித உரிமைகள் பக்கத்தில் மேம்பாடடைவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55