(எம்.மனோசித்ரா)
கடன் மறுசீரமைப்பு விவகாரங்களில் அரசாங்கமானது இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரமான நிலைமைக்குக் கொண்டு செல்வது குறித்து ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன , ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை போன்ற சர்வதேச ஒத்துழைப்புக்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (26) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் , கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தற்போது நாடு எதிர்கொண்டுள்ள தேசிய நெருக்கடியாகவுள்ளது.
சுதந்திரத்தின் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து நாடுகளும் வெளிநாடுகளிடம் கடன் பெற்றுள்ளன. அவ்வாறு கடன் பெறாமல் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது.
இவ்வாறு பெற்ற கடன்களை மீள செலுத்துவதற்காக மேலும் மேலும் கடன் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்தக் கடன்களையும் செலுத்த முடியாத நிலைமை ஏற்படும் போது சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது கட்டாயமாகவுள்ளது.
அதற்கமைய எமது தேசிய கடமையாக கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை ஈடுபாட்டுடன் முன்னெடுத்து வருகின்றோம்.
இதற்காக அரசாங்கத்தின் சார்பில் கிளிபர்ட் ஹான்ஸ் மற்றும் லசார்ட் ஆகிய நிறுவனங்களும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.
கடந்த வாரம் வாஷிங்டனில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டிலும் இலங்கை கலந்து கொண்டிருந்தது. இது தொடர்பில் மத்திய வங்கி தெளிவுபடுத்தும்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் வெளிநாட்டலுவல்க்ள அமைச்சு, வர்த்தக அமைச்சு உள்ளிட்டவை ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றன.
இலங்கை அரசாங்கத்தினால் மனித உரிமைகள் பக்கத்தில் மேம்பாடடைவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM