இரட்டைக் குடியுரிமை விவகாரம் : பஷிலுக்கு பாதிப்பில்லை - சாகர காரியவசம்

Published By: Nanthini

26 Oct, 2022 | 01:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தினால் பொதுஜன பெரமுனவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை, நாட்டுக்கே பாதிப்பு ஏற்படும். 

மீண்டும் பழங்குடியினர் யுகத்துக்குச் செல்லக் கூடாது என்பதற்காகவே 22 ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 

இரட்டை குடியுரிமையானது பஷில் ராஜபக்ஷவின் செயற்பாட்டு அரசியலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தேர்தலுக்கு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை. தேர்தலில் கட்சி என்ற ரீதியில் போட்டியிட்டு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (ஒக் 26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கிறிஸ்தவ மதத்தை அரச மொழியாக கொண்டுள்ள இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியினரான இந்து ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

இங்கிலாந்து நாட்டு மக்கள் புதிய பிரதமரான ரிஷி சுனக் எந்த இனம், எந்த மதம் என ஆராயவில்லை. 

நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து அவர் எவ்வாறு நாட்டை மீட்டெடுப்பார் என்றே அவதானம் செலுத்தினார்கள்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் ஊடாக இரட்டை குடியுரிமை கொண்ட பஷில் ராஜபக்ஷவுக்கு அரசியல் தடை ஏற்படுத்தியவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் நியமனம் கண்ணத்தில் அறைந்தது போல் இருக்கும்.

குறுகிய நிலையில் இருந்துகொண்டு ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் ஈடுபட அரசியலமைப்பு ஊடாக தடை ஏற்படுத்தப்படவில்லை.

பழங்குடி நிலையில் இருந்து உலக நாடுகள் முன்னேற்றமடைந்து வரும்போது மீண்டும் பழங்குடியினர் நிலைக்கு செல்லக்கூடாது என்பதற்காகவே அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

22ஆவது திருத்தம் நிறைவேற்றத்தினால் பொதுஜன பெரமுனவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை, நாட்டுக்கே பாதிப்பு ஏற்படும்.

இரட்டை குடியுரிமை கொண்ட பஷில் ராஜபக்ஷவுக்கு அரசியல் ரீதியில் எவ்வித தடையும் ஏற்படுத்தப்படவில்லை. எதிர்வரும் நாட்களில் அவர் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவார்.

பொருளாதார நெருக்கடிக்கு பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே தீர்வு காண முடியும்.

தேர்தலுக்கு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு கிடையாது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் எத்தேர்தலையும் எதிர்கொள்ள தயார். 

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்து, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. கட்சி என்ற ரீதியில் தனித்துப் போட்டியிடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33