(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தினால் பொதுஜன பெரமுனவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை, நாட்டுக்கே பாதிப்பு ஏற்படும்.
மீண்டும் பழங்குடியினர் யுகத்துக்குச் செல்லக் கூடாது என்பதற்காகவே 22 ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இரட்டை குடியுரிமையானது பஷில் ராஜபக்ஷவின் செயற்பாட்டு அரசியலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
தேர்தலுக்கு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை. தேர்தலில் கட்சி என்ற ரீதியில் போட்டியிட்டு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் எனவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (ஒக் 26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கிறிஸ்தவ மதத்தை அரச மொழியாக கொண்டுள்ள இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியினரான இந்து ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
இங்கிலாந்து நாட்டு மக்கள் புதிய பிரதமரான ரிஷி சுனக் எந்த இனம், எந்த மதம் என ஆராயவில்லை.
நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து அவர் எவ்வாறு நாட்டை மீட்டெடுப்பார் என்றே அவதானம் செலுத்தினார்கள்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் ஊடாக இரட்டை குடியுரிமை கொண்ட பஷில் ராஜபக்ஷவுக்கு அரசியல் தடை ஏற்படுத்தியவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் நியமனம் கண்ணத்தில் அறைந்தது போல் இருக்கும்.
குறுகிய நிலையில் இருந்துகொண்டு ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் ஈடுபட அரசியலமைப்பு ஊடாக தடை ஏற்படுத்தப்படவில்லை.
பழங்குடி நிலையில் இருந்து உலக நாடுகள் முன்னேற்றமடைந்து வரும்போது மீண்டும் பழங்குடியினர் நிலைக்கு செல்லக்கூடாது என்பதற்காகவே அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
22ஆவது திருத்தம் நிறைவேற்றத்தினால் பொதுஜன பெரமுனவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை, நாட்டுக்கே பாதிப்பு ஏற்படும்.
இரட்டை குடியுரிமை கொண்ட பஷில் ராஜபக்ஷவுக்கு அரசியல் ரீதியில் எவ்வித தடையும் ஏற்படுத்தப்படவில்லை. எதிர்வரும் நாட்களில் அவர் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவார்.
பொருளாதார நெருக்கடிக்கு பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே தீர்வு காண முடியும்.
தேர்தலுக்கு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு கிடையாது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் எத்தேர்தலையும் எதிர்கொள்ள தயார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்து, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. கட்சி என்ற ரீதியில் தனித்துப் போட்டியிடுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM