குடும்பத் தகராறு : வயோதிபப் பெண் பலி

Published By: Vishnu

25 Oct, 2022 | 05:18 PM
image

வாழைச்சேனை நிருபர்

கல்குடா பொலிஸ் பிரிவில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற கைகலப்பில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பாடசாலை வீதி பட்டியடிச்சேனையைச் சேர்ந்த த.காந்திமதி வயது (67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

24 ஆம் திகதி தீபாவளி தினமன்று உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்ற இளைய சகோதரி மற்றும் அவரது மகன் ஆகியோர் உயிரிழந்தவரின் மகனுடன் ஏற்பட்ட முரன்பாடு கைகலப்பாக மாறியதினால் இருசாராரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதனால் இதன்போது இவர் உயிரிழந்துள்ளதாக விசாரணையின்போது தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கல்குடா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28
news-image

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி....

2025-03-15 18:52:01
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இளைஞன்...

2025-03-15 16:56:03
news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26