புதிய வழிகாட்டல்கள் சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளன - அம்பிகா சற்குணநாதன்

Published By: Digital Desk 5

24 Oct, 2022 | 05:27 PM
image

 (நா.தனுஜா)

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 94 ஆம் பிரிவின்கீழ் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்கள் சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் கடந்த ஜுலை 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 94 ஆம் பிரிவின் கீழான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டன.

அவ்வழிகாட்டல்களை கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கடந்த 21 ஆம் திகதிவரை அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வழிகாட்டல்கள் தொடர்பில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

கொவிட் - 19 வைரஸ் பரவலின்போது சிறைச்சாலைகள் திணைக்களமானது பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறைக்கைதிகளின் உரிமைகள் பலவற்றை மட்டுப்படுத்தியது.

அதன்படி சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கான நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய உணவும் மட்டுப்படுத்தப்பட்டது. 

எனவே தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்களை சிறைக்கைதிகளின் உரிமைகள் தொடர்பில் தற்காலிகமாகவும், உத்தியோகபூர்வமற்ற வகையிலும் விதிக்கப்பட்டிருந்த மட்டுப்பாடுகளை சட்டபூர்வமாக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சியாகவே எண்ணத்தோன்றுகிறது.

இவ்வழிகாட்டல்கள் மூலம் ஒடுக்குமுறைகள் மிகச்சாதாரணமானவையாக மாற்றப்படுவதுடன் தமது உறவினர்கள் தம்மை வந்து பார்வையிடுவதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும்  சிறைக்கைதிகள் கொண்டிருக்கும் உரிமை குறிப்பிடத்தக்களவில் மறுக்கப்படுகின்றது. 

இவ்வழிகாட்டல்களின் பிரகாரம் சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கான நாட்களின் எண்ணிக்கை வாரத்திற்கு 6 நாட்கள் என்பதிலிருந்து வாரத்திற்கு ஒரு நாள் என்பதாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நாளொன்றில் சிறைக்குள் இருக்கவேண்டிய நேரம் 20 மணித்தியாலங்களில் இருந்து 23 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளமையானது சிறைக்கைதிகளின் ஆரோக்கியத்தின்மீது மிகமோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும். 

மேலும் சிறைக்கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் உணவு வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லாததன் காரணமாகவே சிறைக்கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் உணவு வழங்குகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:03:33
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28
news-image

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட...

2025-03-24 13:09:09
news-image

வீரகெட்டியவில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

2025-03-24 12:37:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-24 12:39:24
news-image

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி

2025-03-24 12:32:49
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10
news-image

பணத் தகராறு ; பெண்ணின் அசிட்...

2025-03-24 11:24:42
news-image

யாழ் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு...

2025-03-24 11:18:43
news-image

பதுளை - பண்டாரவளை வீதியில் விபத்து...

2025-03-24 10:40:07